ETV Bharat / bharat

ஆசிரியரை கொன்ற பயங்கரவாதி பிடிபட்டதாக தகவல்!

author img

By

Published : Jun 15, 2022, 5:34 PM IST

ஆசிரியரை கொன்ற பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

kulgam
kulgam

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கோபால்போரா பகுதியில், கடந்த 8ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பள்ளி ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, ஆசிரியரை கொன்ற பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். நேற்று(ஜூன் 14) முதல் என்கவுன்ட்டர் நடவடிக்கையும் தொடங்கியதாகவும் பாதுகாப்புப் படை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆசிரியரை கொன்ற பயங்கரவாதி இன்று அதிகாலை பாதுகாப்புப்படையினரிடம் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து என்கவுன்ட்டர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் என்கவுன்ட்டர் தொடங்கிவிட்டது - பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கோபால்போரா பகுதியில், கடந்த 8ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பள்ளி ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, ஆசிரியரை கொன்ற பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். நேற்று(ஜூன் 14) முதல் என்கவுன்ட்டர் நடவடிக்கையும் தொடங்கியதாகவும் பாதுகாப்புப் படை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆசிரியரை கொன்ற பயங்கரவாதி இன்று அதிகாலை பாதுகாப்புப்படையினரிடம் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து என்கவுன்ட்டர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் என்கவுன்ட்டர் தொடங்கிவிட்டது - பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.